டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் இயக்கி உள்ள படம் ஏ தில் ஹெ முஷ்கில். இதில், ரன்பீர் கபூர், ஐஸ்வர்யாராய், அனுஷ்கா சர்மா நடித்துள்ளனர். பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். எல்லையில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாகிஸ்தான் நடிகர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
5 கோடி நன்கொடை
படத்தை வெளியிட மராட்டிய நவநிர்மான் சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மீறி திரையிட்டால் தியேட்டரை தாக்குவோம் என்று அறிவித்தது. இந்நிலையில் இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மகேஷ் பட் மற்றும் படத்தை தயாரித்த, தர்மா புரொடக்ஷ்ன் நிர்வாக அதிகாரிகள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்கள். அவரது வழிகாட்டுதலின் படி மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் இல்லத்தில் நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கருக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் பாகிஸ்தான் நடிகரை நடிக்க வைத்த வைத்தற்காக இந்திய ராணுவத்திற்கு 5 கோடி நிதி வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு தயாரிப்பு தரப்பும் ஒத்துக் கொண்டது.
சபனா ஆஸ்மி
இந்த நிலையில் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து இந்தி நடிகை சபானா ஆஸ்மி கூறியிருப்பதாவது: இது ஒரு வேதனையான செயல். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு பதிலாக ஒரு முதல்வர் தரகு வேலை பார்த்திருக்கிறார். தேசப்பற்றுக்கு 5 கோடி வாங்கி உள்ளனர். மக்களின் தேசப்பற்றை ஒரு கட்சி தீர்மானிப்பதா? நான் தேசப்பற்று உள்ளவளா? இல்லையா? என்பதை அந்த கட்சி தான் தீர்மானிக்குமா? என்று கேட்டுள்ளார்.
இயக்குனர் அசோக் பண்டிட்
பிரபல இயக்குனர் அசோக் பண்டிட் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் நடிகரை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்காக 5 கோடி ராணுவத்துக்கு நன்கொடை வசூலித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லை. நன்கொடை என்பது சுய விருப்பத்துடன் வழங்குவது. இது நிர்பந்தித்து மிரட்டி பறிக்கும் செயல். இது தவறான முன்னுதாரணம். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகை தரா தேஷ் பாண்டே
நடிகை தரா தேஷ் பாண்டே கூறியிருப்பதாவது: நாட்டின் மிகப்பெரிய சக்தியான ராணுவத்தின் பெயரால் எந்த விதத்திலும் எந்த காரணத்துக்காவும் மிரட்டி பணம் பறிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. என்று கூறியுள்ளார்.
நடிகை ரேணுகா சஹானா
நடிகை ரேணுகா சஹானா கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் நடிகரை பயன்படுத்தியதற்காக போராட்டம் நடத்தும் நவநிர்மாண் சேனா மும்பை தாக்குதலுக்கோ, பதன்கோட் தாக்குதலுக்கோ எந்த போராட்டமும நடத்தவில்லையே ஏன்? சினிமாவை எதிர்த்து மட்டும் போராட்டம் நடத்துவது உள்நோக்கம் கொண்டது என்று கூறியிருக்கிறார்.
ராணுவம் அதிகாரி எதிர்ப்பு
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியருப்பதாவது: ராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ராணுவத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலுக்கு ராணுவத்தை பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. ராணுவ நிதிக்கு தாமாக முன்வந்து நன்கொடை அளித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம். வற்புறுத்தல், மிரட்டலால் வரும் பணத்தை ஏற்க மாட்டோம். என்று கூறியுள்ளார்.