மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
2011ம் ஆண்டு தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஆரண்ய காண்டம் படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. வட சென்னையில் கோழிச் சண்டையை வைத்து நடக்கும் அண்டர்கிரவுண்ட் சூதாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த படம். ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, யாஷ்மின் பொப்பண்ணா, சம்பத்ராஜ், குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்திருந்தனர். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தியாகராஜன் குமாரராஜாவும் மற்றும் சிறந்த எடிட்டருக்கான விருதை கே.எல்.பிரவீன் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோரும் பெற்றனர்.
இந்தப் படத்திற்கு பிறகு பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு படம் இயக்க கேட்டு தியாகராஜன் குமாரராஜாவை கேட்டது. ஆனால் அவர் இயக்கவில்லை. "எனக்கு அடுத்த கதை தோன்ற வேண்டும், அதை நான் திரைவடிவமாக மாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த படம் இயக்குவேன்" என்றார். அப்படி அவர் கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது மீண்டும் படம் இயக்கத் தயாராகிவிட்டார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு நிகரான கேரக்டரில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். எதிரும் புதிருமான இரு இளைஞர்களின் வாழ்க்கை கதை. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. முறைப்படியான அறிவிப்பு தீபாவளிக்கு பிறகு வெளியிடப்பட இருக்கிறது.