சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் | சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா? | 'எல்360' படப்பிடிப்பு ஆரம்பம் |
ஆர்.சிவராஜ் என்பவர் இயக்கிய குறும்படம் என் அன்பிற்குரியவளே. இதனை காதல் கண் கட்டுதே என்ற தலைப்பில் திரைப்படமாக அவரே இயக்கி உள்ளார். கோவை பிலிம்மேட்ஸ் சார்பில் தேவா தயாரித்துள்ளார். கே.ஜி, அதுல்யா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பவன் இசை அமைத்துள்ளார்.
"துணிச்சலாக பத்திரிகையாளரான அதுல்யாவும், மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவாக இருக்கும் கே.ஜிக்கும் இடையிலான காதல்தான் படம். இந்த காதல் வித்தியாசமானது. அதுல்யா முற்போக்கு கருத்துக்களை கொண்டவர். கே.ஜி முற்போக்கு கருத்துன்னா கிலோ என்ன விலை என்ற கேட்கிறவர். அவருக்கு தனது மார்க்கெட்டிங்கை தாண்டி எதுவும் தெரியாது. இந்த காண்டவர்சிதான் படத்தின் திரைக்கதை. கதையில் வில்லன் என்று யாரும் கிடையாது. சூழ்நிலைகள்தான் வில்லனாக அமையும்.
கோவைதான் கதை களம். இதுவரை கோவையில் கேமரா படாத பகுதிகளில் படமாக்கி உள்ளோம் அடுத்த மாதம் வெளிவருகிறது. "புகை பிடித்தல் காதலுக்கு கேடானது. காதல் லைப்புக்கு கேடானது" என்பதை ஜாலியாக சொல்கிறோம். என் அன்பிற்குரியவளே குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் அதையே கொஞ்சம் விரிவுபடுத்தி படமாக இயக்கி உள்ளேன்" என்கிறார் இயக்குனர் ஆர்.சிவராஜ்.