ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இருமுகன் படத்தை அடுத்து காஷ்மோரா, டோரா, இமைக்கா நொடிகள் மற்றும் மீஞ்சூர் கோபி இயக்கும் படம் என நான்கு படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. இதில் காஷ்மோரா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. டோரா, மீஞ்சூர் கோபி இயக்கும் படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா, இமைக்கா நொடிகளில் நடிக்கவிருக்கிறார். இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மோகன்ராஜா இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதியுடன் இணைந்து நயன்தாரா நடித்த நானும் ரெளடிதான் படம் வெளியாகி அக்டோபர் 21-ந்தேதியோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் வகையில் அந்த படக்குழுவினர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளனர். இந்த பார்ட்டியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் உற்சாக மாக கலந்து கொண்டு பார்ட்டியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த படத்தில் இணைந்தபோதுதான் நயன்தாரா- விக்னேஷ்சிவன் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.