ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. சரித்திர கதையில் பிரமாண்டமாக உருவான இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் இந்தி திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த பிரமாண்ட படமானது. அதையடுத்து இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் அதே நடிகர் நடிகைகளை வைத்து இயக்கிக்கொண்டி ருக்கிறார் ராஜமவுலி.
மேலும், பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சியான கதையில் உருவாகும் இந்த படத்தை முந்தைய பாகத்தை விடவும் பிரமாண்டமாக இயக்கி வரும் ராஜமவுலி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி படத்தை வெளியிடப்போவதாக அறிவித் துள்ளார். இந்த நிலையில், நேற்று பாகுபலி-2 படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டது. பிரபாஸ் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது போல் வெளியாகியிருக்கும் அந்த போஸ்டர் இணையதளங்களில் பெரிய அளவில் டிரண்ட்டாகியிருக்கிறது.