Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவாகரத்துக்கான காரணம் கூறும் பாலா மனைவி..!

22 அக், 2016 - 17:23 IST
எழுத்தின் அளவு:
Actor-Balas-wife-says-the-reason-of-divorce

அறியாமையால நான் எடுத்த சில முடிவுகள் தான் இந்த விவாகரத்தை நான் சந்திக்கும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என கூறியுள்ளார் நடிகர் அன்பு பாலாவின் மனைவியான அம்ரிதா சுரேஷ். தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். சமீபத்தில் வெளியான புலிமுருகன் படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டதில் உற்சாகமாக இருக்கிறார் மனிதர்.


இந்த உற்சாகத்தில் தனது கடந்த கால, திருமணம் குறித்த கசப்பான நினைவுகளை மறக்க முயற்சிக்கிறாராம் பாலா. கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான அம்ரிதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார் பாலா. அம்ரிதா சுரேஷ் ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமானவர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு. இந்த விவாகரத்து விஷயம் தொடர்பாக கடந்த வருடமே ஊடகங்களில் செய்திகள் வெளியானபோது கணவன், மனைவி இருவருமே அதை மறுத்து வந்தனர்.. ஆனால் இதோ நீதிமன்றம் அதை உறுதிப்படுத்தியுள்ளது.. பாலா இதுகுறித்து எதுவும் பேசவில்லை..


ஆரம்பத்தில் இந்த விவாகரத்து செய்தியை மறுத்துவந்தாலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் அம்ரிதா. “வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவள் நான்.. அதனாலேயே அப்பாவித்தனமாக இருந்துவிட்டேன்.. அதன் காரணமாக என் திருமணம் உட்பட அறியாமையால் நான் எடுத்த சில முடிவுகள் தான் இன்று விவாகரத்து வரை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. ஆனால் நல்லவேளையாக வீட்டில் எனது பெற்றோரும், எனது சகோதரியும் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது ஆறுதலான விஷயம்” என்று கூறியுள்ளார்., விவாகரத்துக்குப்பின் அவர்களது குழந்தை அவந்திகா அம்ரிதாவிடம் தான் இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in