பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், 3, வை ராஜா வை படங்களை அடுத்து சினிமா வீரன் -என்ற பெயரில் ஸ்டன்ட் மாஸ்டர்களைப்பற்றிய ஆவணப்படம் எடுக்கிறார். அதோடு தனது தந்தை ரஜினியின் சுயசரிதையை எழுதும் ஐஸ்வர்யா தனுஷ், அவரை வைத்து அந்த படத்தை எடுக்கவும் எதிர்கால திட்டம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆக, சினிமாவில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார் அவர்.
இந்த நிலையில், அவரது கணவர் தனுஷை காதல் மன்னன் ரேஞ்சுக்கு சில நடிகைகளுடன் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்களும் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதனால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு, அந்த பிரச்சினையை ரஜினி தலையிட்டு தீர்த்த வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதுபற்றி ஐஸ்வர்யா தனுஷ் கூறுகையில், சினிமாவை முழுமையாக தெரிந்தவள் நான். எனது பேமிலியே சினிமா பேமிலி. அதனால் கிசுகிசுக்களை எந்த மாதிரி மனைநிலையுடன் பார்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதற்கும் மேலாக, என் கணவர் தனுஷைப்பற்றி எனக்கு ரொம்ப நன்றாக தெரியும். அதனால் இந்த மாதிரி தேவையில்லாத கிசுகிசுக் களைப்பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று நெத்தியடியாக பதில் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.