‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை நிழவி வருகிறது. இதனால் இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர் நடிகைகளுக்கு தடைவதிக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்ததால் இயக்குநர் கரண் ஜோகர் இயக்கிய ‛ஏ தில் ஹே முஷ்கில்' படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் மேலும் ஒரு பாகிஸ்தான் நடிகரான இம்ரான் அப்பாஸ் நடித்திருப்பது படக்குழுவிற்கு சிக்கல் மேல் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.
இதைப்பற்றி இம்ரான் அப்பாஸ் கூறியதாவது.... "கரண் ஜோகர் இயக்கிய ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் நான் நடித்துள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. படத்தின் காட்சிகளை கரண் போல் வேறு யாராலும் விவரிக்க முடியாது. அவர் நடித்து காட்டியதை நடிகர்கள் அப்படியே நடித்துவிடுவர். கரண் படத்தில் நான் முதன்முறையாக நடிக்கிறேன். நான் வேறு நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும் அவருடன் பணியாற்றியது மிகவும் வசதியாக இருந்தது. மேலும் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, லிசா ஹெய்டன் ஆகியோருடன் நடித்தது என் பால்ய நண்பர்களுடன் நடித்து போல் இருந்தது" என்றார்.
‛ஏ தில் ஹே முஷ்கில்' படம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.