தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள நடிகரும் கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவருமான சீனிவாசன், சமீபத்தில் உடல் உறுப்பு தானத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியிருக்கிறார்.. அவருடைய கருத்துப்படி ஆர்கன் டொனேஷன் என்பது புதுமையான ஒரு ஏமாற்று வேலை என்பதான். தனது கருத்து குறித்து ஒரு கட்டத்தில் அவர் வருத்தம் தெரிவித்தாலும் கூட பல பிரபலங்கள் அவர் சொன்ன கருத்திற்கு அவ்வப்போது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் இப்போது கூட பதிவு செய்து வருகிறார்கள்.
குறிப்பாக சீனிவாசன் சொன்னது தேசிய விருதுபெற்ற மலையாள குணச்சித்திர நடிகரான சலீம் குமாரை ரொம்பவே பாதித்துவிட்டது.. அதற்கு காரணம் இன்னொருவர் தனக்கு கொடுத்த ஆர்கன் டொனேஷனில் தான், தற்போது தான் உயிர் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார் சலீம் குமார்... சீனிவாசன் போன்றவர்கள் இதுபோன்று ஆராயாமல் கருத்து சொல்லியிருப்பது தன் மனதை பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை எடுத்துவரும் சலீம் குமார் தன்னை பாதித்துள்ள நோய் என்னவென்று இதுவரை வெளிப்படையாக சொன்னதில்லை. ஆனால் இப்போது ஓரளவு குணமாகிவிட்ட சலீம்குமார், சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'தோப்பில் ஜோப்பன்' படம் மூலம் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.