ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டால், ஒரு ஆறு மாதங்கள் ஆறப்போட்டுவிட்டு அதற்கப்புறம் தான் அதன் இரண்டாம் பாகம் எதுவும் எடுக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்படும். சொல்லப்போனால் அப்படி கேள்வி கேட்கப்பட்ட பின்னர்தான் நம்ம படத்துக்கு ரெண்டாம் பாகம் கூட எடுக்கலாமா என்கிற யோசனையே சில இயக்குனர்களுக்கு தோன்றும். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்' படம் வெளியாகி இரண்டு வராம் கூட ஆகாத நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என படத்தின் இயக்குனர் வைசாக்கிடம் கேட்கப்பட்டது..
அதற்கு அவர் “'புலி முருகன்' இரண்டாம் பாகம் எடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் நிச்சயமாக இன்னும் இரண்டு வருடங்களுக்காவது அது பற்றியே பேச்சே இல்லை. இந்தப்படத்தையே ஒரு தவம் மாதிரி நினைத்து உழைத்த எங்களது யூனிட்டார், இப்போதுதான் விடுதலை பெற்று அவரவர் வீட்டிற்கே சென்றுள்ளார்கள்.. எதிர்காலத்தில் இதே டீம், முதல் படத்திற்கு ஒத்துழைத்த இதே எனர்ஜியுடன் இருக்குமானால் அப்போது தான் இரண்டாம் பாகம் எடுப்பதை பற்றி யோசிக்கவே முடியும்” என கூறியுள்ளார்.