தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துல்கர் சல்மான் தமிழில் நடித்தது வெறும் இரண்டு படங்கள் தான்... அதில் அவரை இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'ஓ காதல் கண்மணி' படம். ஆனால், அதற்கு முன்னரே குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் 'வாயை மூடி பேசவும்' படம் அவரை பிரபலப்படுத்திவிட்டது... அதுதான் சில தினங்களாக திருப்பூரில் நடைபெற்று வரும் அவரது மலையாள படப்பிடிப்பில் அவரைக்காண பள்ளிக்குழந்தைகளை கூட்டம் கூட்டமாக வரவைத்தும் விட்டது.
துல்கர் சல்மான் தற்போது பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. கேரளா மற்றும் தமிழகம் என இரண்டு பகுதிகளிலும் நடக்கும் கதை என்பதால் கடந்த சில தினங்களாக திருப்பூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. மாலை நேரத்தில் படப்பிடிப்பில் இருந்த தன்னைக்காண கூடியிருந்த கூட்டத்தை, குறிப்பாக பள்ளிச்சீருடையுடன் குழுமியிருந்த மாணவர்களை கண்டு சந்தோஷத்தில் திகைத்து போய்விட்டாராம் துல்கர் சல்மான். இந்தப்படத்தில் துல்கரின் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.