வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவில் இப்போதுதான் 'போகன்' படத்தின் கதைத் திருட்டு விவகாரம் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் இயக்குனர்கள் தங்களது சொந்தக் கதைகளையும், தங்களது நண்பர்கள் வாழ்வில் நடந்த கதைகளையும் சினிமாவாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக உலக மொழிகளில் எங்கெல்லாம் திரைப்படங்கள் வெளியாகிறதோ அங்கிருந்தெல்லாம் கதைகளைத் தேடி எடுத்து காப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களிலிருந்துதான் இந்த காப்பி விவகாரம் இருக்கும். ஆனால், அந்தப் படங்களை தமிழ் ரசிகர்களும் பார்த்துவிடுவதால் கொரியன், ஜப்பான், ஈரான் மொழிப் படங்களைப் பார்த்து காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்படி காப்பியடித்து ஒரே சமயத்தில் ஒரே கதையை பலர் படமாக்கும் காமெடி சம்பவங்களும் இங்கு நடந்துள்ளன. அந்த விதத்தில் தற்போது புதிதாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கும் 'புரூஸ் லீ' படத்தின் கதையும், நடன இயக்குனர் சான்டி நாயகனாக நடிக்கும் 'பலசாலி' படத்தின் கதையும் ஒன்றோ என ஆச்சரியப்பட வைக்கிறது. இரண்டு படங்களுக்குள்ளும் இருக்கும் பெயர் ஒற்றுமையும் யதேச்சையாகவே நடந்திருக்க வேண்டும்.
'புரூஸ் லீ' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் படத்தின் கதையைப் பற்றிச் சொன்னார். “இது ஒரு நகைச்சுவைப் படம்தான், ஆக்ஷன் படமல்ல. படத்திற்குத்தான் புரூஸ் லீ எனப் பெயர் வைத்திருக்கிறோமே தவிர படத்தில் நாயகன் கடைசி வரை யாரையும் அடிக்கவே மாட்டார்,” என்றார்.
'பலசாலி' படத்தின் கதை என்ன தெரியுமா ?. “பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் 'பலசாலி''.
இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான் என்பதற்கு இதுவே போதுமானது. இந்தக் கதையை எந்த ஆப்பிரிக்க, கொரிய, ஜப்பானிய, ஈரானிய படத்திலிருந்து ஒரே சமயத்தில் இரண்டு இயக்குனர்களும் சுட்டார்களோ... படம் வெளிவந்தால் தெரிந்துவிடப் போகிறது.