‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரபல மலையாள இயக்குனர் துளசி தாஸ், தமிழ் மற்றும் மலையாள மொழியில் இயக்கி உள்ள படம் திரைக்கு வராத கதை. பெண்கள் மட்டுமே நடித்துள்ள புதுமையான படம். நதியா, இனியா, ஈடன், ஆர்த்தி, ஆரதி, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் தயாரித்துள்ளார்.
விடுதியில் தங்கி வேலை பார்க்கும் பெண்களும், கல்லூரி மாணவிகளும் இணைந்து ஒரு குறும்படம் எடுப்பதற்காக காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஒரு அமானுஷ்ய சக்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலை. அப்போது அதில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான நதியா வருகிறார். இப்படி போகிற கதையில்... ஒரே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிற ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் காதல் வருகிறது. இருவரும் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். நெருக்கமாகவும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது பெண்ணுக்கும் பெண்ணுக்குமான லெஸ்பியன் காதல், நெருக்கமான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்ற கூறிவிட்டனர். இதனால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னர் படத்துக்கு யூஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
"ஆண்களே நடித்திராத படத்திற்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேண்டும் என்பதற்காக ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புதாக ஜாலியாக சில காட்சிகள் வைத்தோம். ஒரு டூயட்டையும் வைத்தோம். இவை எல்லாம் காமெடிக்காகத்தான் மற்றபடி படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. படத்தை தீபாவளிக்கு வெளியிட எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். அதனால் தணிக்கை குழுவை எதிர்த்து வாதாடாமல் அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கினோம். திரைக்கு வராத கதை என்று தலைப்பு வைத்த படம் திரைக்கே வராவிட்டால் என்ன செய்வது" என்கிறார்கள் படக்குழுவினர்.