'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
முன்னாள் பாரத பிரதமர் இந்திர, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ள படம் 31 அக்டோபர். கலவரத்தில் சிக்கிக் கொண்ட அப்பாவி சீக்கிய குடும்பம் ஒன்று உயிருக்கு பயந்து ஓடிய கதை.
இந்தப் படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்று தணிக்கை குழு சான்றிதழ் தராமல் இழுத்தடித்தது. பின்னர் பல மாத போராட்டத்திற்கு பிறகு சில காட்சிகள் நீக்கப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றனர். அதன் பிறகு நிகழ்கால தலைவர்கள் சிலர் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி அஜய் கட்டாரா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ரோஹனி, மற்றும் நீதிபதி சங்கீதா திங்ராசேகர் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. "31 அக்டோபர் படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் திரைப்பட தணிக்கை வாரியம் முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது. எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று வழக்கை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து படம் வெளியாவதில் இருந்த தடை நீங்கியது, இதனால் படம் திட்டமிட்டபடி இன்று வெளியானது.