'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒவ்வொரு வருட தீபாவளிக்கு முன்பும் புதுப் பட வெளியீடுகள் மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு இரண்டு வாரம் முன்பாக எந்தப் புதுப்படங்களையும் வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு எப்படியும் பெரிய படங்கள்தான் வரும். அந்தப் படங்களுக்காக சில பல கோடிகள் விளம்பரம் செய்து படத்தைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். அதனால்தான் சில சிறிய படங்கள் கூட தீபாவளி எதிரில் இருக்கும் போது படத்தை வெளியிட விரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு நிகழ்வு கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்த் திரையுலகத்தில் இருந்து வருகிறது.
அக்டோபர் 7ம் தேதியன்று 'ரெமோ, றெக்க, தேவி' ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே வெற்றி பெற்று இரண்டு வாரங்களை வெற்றிகரமாக முடிக்க உள்ளன. அக்டோபர் 14ம் தேதியன்று 'அம்மணி' படம் மட்டுமே தனியாக வெளிவந்தது. நாளை 21ம் தேதி 'காகித கப்பல், நீ என்பது' ஆகிய இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இவற்றோடு ஏற்கெனவே வெளிவந்த 'கதிரவனின் கோடை மழை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார்கள்.
அடுத்த வாரம் தீபாவளியன்று 'காஷ்மோரா, கொடி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிட அவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.