ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
பெங்களூரில் கண்டக்டராக வேலைபார்த்து இன்று தமிழ்சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கோலோச்சும் ரஜினியின் சாதனை வரலாற்றை அனைவரும் அறிவர்.. ஆனால் இதே ரஜினி, நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபின், நமக்கெல்லாம் எங்கேப்பா நடிக்க சான்ஸ் கிடைக்கப்போகிறது என ஒருகட்டத்தில் மனம் வெறுத்து ஊருக்கு கிளம்பிய கதையும் அதை மலையாள நடிகர் ஒருவர் தடுத்து நிறுத்திய கதையும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சென்னைக்கு கிளம்பிவந்து திரைப்பட கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாரே தவிர, அங்கே நடிப்பு பயிற்சிக்காக பைனாப்பிள். எலுமிச்சை கலர்களில் வந்திருந்த இளைஞர்களையும் தன்னையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு, நமக்கு எங்கே வாய்ப்பு கிடைக்கப்போகிறது. பேசாமல் ஊருக்கு கிளம்பிவிடலாம் என்றுதான் முடிவெடுத்தாராம். ஆனால் அவருடன் படித்த இரண்டு மலையாள நண்பர்கள், மலையாள சினிமாவில் கருப்பு உருவம் கொண்ட சத்யன் சூப்பர் ஹீரோவாக ஆட்சி செய்த வரலாறை கூறி அவரை தைரியப்படுத்தினார்களாம்.. தொடர்ந்து சத்யன் படங்களை பார்க்க ஆரம்பித்த ரஜினிக்கு பின்னர்தான் புதிய உத்வேகம் பிறந்ததாம். ஆக, ரஜினி இன்று சூப்பர்ஸ்டாராக வலம் வர, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய மறைந்த மலையாள நடிகர் சத்யனும் ஒருவகையில் காரணம் என்பதை மறுக்க முடியுமோ..?