ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. கரண் ஜோகர் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்தப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்திருப்பதால் படத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் எம்என்எஸ்., கட்சியினர் படத்தை திரையிட விடமாட்டோம், மீறினால் தியேட்டரில் புகுந்து தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், ஏய் தில் ஹே முஷ்கில் படத்திற்கு தெலுங்கானாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில், பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,-வான ராஜா சிங், இந்தப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் நடித்திருப்பதால் நம் தேசப்பற்றை காண்பிக்க இப்படத்தை திரையிடக்கூடாது, மீறி திரையிட்டால் தியேட்டர்கள் தாக்கப்படும் என ஐதராபாத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.