டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் தனுஷ் பாடல் எழுதுவது, பாடுவது பற்றி பலரும் நக்கல் அடித்தாலும் தனுஷ் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. தனக்கு தோன்றியதை அவர் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருக்கிறார். மற்றவர்களின் விமர்சனத்தைப் பற்றி அவர் பொருட்படுத்துவதே இல்லை. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோர் நடிக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திலும் தனுஷ் சொந்தக்குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
ஹாரர் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அவரது இசையில் தனுஷ் பாடிய பாடல் ஒலிப்பதிவு நேற்று நடைபெற்றது. யுவன்சங்கர்ராஜா, செல்வராகவன் உடன் பாடல் பதிவில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். ஜாலியாய் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில், கீபோர்டு வாசித்துக்கொண்டே தனுஷ் பாட, அதைக்கேட்ட யுவன் காதைப்பொத்த, அண்ணன் செல்வராகவன் தலையில் கைவைத்துக் கொண்டிருக்கிறார்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த செல்வராகவனின் 'புதுப்பேட்டை' படத்திற்காக யுவன் சங்கர்ராஜா இசையில் 'எங்க ஏரியா உள்ள வராதே....' பாடலை தனுஷ் பாடியிருந்தார். இடையில் அனிருத் உடன் நெருக்கமாக இருந்ததால் யுவன் பக்கமே வராமல் இருந்த தனுஷ் தற்போது 10 வருடத்துக்கு பிறகு யுவன் இசையில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.