பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றைக்கு சினிமாவில் வட்டார மொழி என்பது சர்வசாதரணமான ஒன்று. திருநெல்வேலியில் கதை நடந்தால் கேரக்டர்கள் "அண்ணாச்சி, ஏலே..." என்று வட்டார மொழி பேசுவார்கள். மதுரை கதை களம் என்றால் "எங்ககிட்டேயேவா... கொண்டேபுடுவேன்..." என்று பேசுவார்கள். கோவை பகுதி கதை என்றால் "ஒன்ற பொண்ணு என்ற வீட்டு மருமகளாக்கும்" என்பார்கள், சென்னை படம் என்றால். "அப்படியே வுட்டேன் செவிளு பிகிளாகிடும்" என்றார்கள்.
ஆனால் அந்தக் காலத்தில் எந்த ஊர் கதை என்றாலும் ஒரே மாதிரிதான் பேசுவார்கள். முதன் முதலாக வட்டார வழக்கில் வெளிவந்த படம் மக்களை பெற்ற மகராசி. சிவாஜி கணேசன், பானுமதி, கண்ணாம்பா, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். கே.சோமு இயக்கி இருந்தார்.
இதில் நடித்த அனைவரும் கோவை பகுதி வட்டார மொழியான கொங்கு தமிழ் பேசி நடித்திருந்தார்கள். செந்தமிழ் வசனம் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் "ஏனுங்கோ வாங்கோ உட்காருங்கோ" என கொங்கு தமிழ் பேசினார். படத்தில் இடம்பெற்ற "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லக்கண்ணு..." என்று கொங்கு தமிழிலேயே உருவாக்கப்பட்டிருந்தது. 1957ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியது யார் தெரியுமா?, புராண படங்களில் அனல் தெறிக்கும் தூய தமிழ் வசனங்களை எழுதிய ஏ.பி.நாகராஜன் தான்.