தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ஓம் புரி. தற்போது தன் வயதுக்கு ஏற்ற வகையிலான ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த யுரி தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், அதையடுத்து பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விவாதம் நடந்தது.
அதில் பங்கேற்ற நடிகர் ஓம் புரி, ""ராணுவ வீரர்களை நாமா போய் வலுக்கட்டாயமாக அங்கு சேர சொன்னோம் என்பது உள்ளிட்ட இன்னும் சில கருத்துக்களை தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களை இப்படி அவமதிக்கும் வகையில் பேசிய அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தன் கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி தான் தண்டைக்குரியவன் என்றும் கூறியுள்ளார்.
இதுப்பற்றி ஓம் புரி மேலும் கூறியிருப்பதாவது... ""ராணுவ வீரர்கள் பற்றி நான் பேசியது தவறு, நிச்சயம் நான் தண்டனைக்குரியவன் தான். முதலில் நான், யுரி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெறும் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது. என்னை, கோர்ட் விசாரித்து தண்டிக்க வேண்டும். மேலும் ராணுவம், எந்தமாதிரி ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என்று கற்று கொடுக்க வேண்டும். ராணுவ வீரர்களின் குடும்பத்தாரிடம் மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.