தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர் நடிகைகளுக்கு இந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்தி நடிகர்கள் சல்மான்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "கலைக்கு எல்லை கிடையாது. பாகிஸ்தான் நடிகர்கள் பயங்கரவாதிகள் அல்ல. இது தவறான முன்னுதாரணம்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இப்போது ராதிகா ஆப்தேவும் பாகிஸ்தான் நடிகர்கள் தடையை எதிர்த்துள்ளார். நேற்று மும்பையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்த கொண்டு திரும்பிய ராதிகா ஆப்தேவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர் அதற்கு அவர் "வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தங்கள் கடைதிறந்து வியாபாரம் செய்யும்போது அண்டை நாடான பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிக்க கூடாதா. அவர்கள் இங்கு வந்து நடிக்கட்டும், பேதங்களை கடந்து எல்லோரையும் ஒருங்கிணைப்பது கலையும், விளையாட்டும்தான் அதையும் பிரித்துவிடக்கூடாது" என்றார்.