ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், அடுத்தப்படியாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் எனும் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்தப்படியாக சூர்யாவை இயக்க இருந்தவர், ரஜினியிடமிருந்து அழைப்பு வர ‛கபாலி' கதையை சொல்லி ஓ.கே., வாங்க, மூன்றாவது படத்திலேயே ரஜினியுடன் இணைந்தார். கபாலி படமும் வெளியாகி வசூலை குவித்துவிட்டது. கபாலி கொடுத்த உற்சாகம், மீண்டும் ரஜினியும், ரஞ்சித்தும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ‛மாவீரன் கிட்டு' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் இயக்குநர்கள் ரஞ்சித், சமுத்திரகனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் டிரைலரை ரஞ்சித் வெளியிட்டார்.
விழாவில் பேசிய ரஞ்சித்... ‛‛கபாலி படத்திற்கு பிறகு ரஜினி மீண்டும் அழைத்தார். நான் சொன்ன ஒன்-லைன் ஸ்டோரி அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. உடனே படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார். என் மீதும், என் கதை மீதும் உள்ள நம்பிக்கையில் மீண்டும் இன்னொரு பட வாய்ப்பை கொடுத்துள்ளார் ரஜினி. நிச்சயம் அவரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்'' என்றார்.
மாவீரன் கிட்டு படம் 1987-ம் ஆண்டு, பழனியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா உடன் பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கியுள்ளார், இமான் இசையமைத்துள்ளார்.