தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
எவிடே சுப்ரமணியம், பலே பலே மகாதேவோ, ஜென்டில்மேன், மஜ்னு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள நானி தற்போது நேனு லோக்கல் படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்திற்கு பின்னர் நானி, இயக்குனர் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய “நான் ஈ” படத்தில் நாயகனாக நடித்த நானி அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் ஈகா என்ற பெயரிலும் தமிழில் நான் ஈ என்ற பெயரிலும் வெளிவந்த அத்திரைப்படம் ஹிந்தியில் மஹ்ஹி என்ற தலைப்பில் வெளிவந்து வெற்றி பெற்றது. நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுக்களை அள்ளிய சுதீப் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் ராஜமௌலி அப்படத்திற்கு பின்னர் நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என கூறப்படுகின்றது.