‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவில் சுமூகமான உறவு இல்லை. இருநாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது இந்திய சினிமாவிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக பாலிவுட் சினிமாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாலிவுட் மட்டுமல்ல இந்தியாவிலேயே பாக்., நடிகர்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்., நடிகர்கள் பணியாற்றிய படங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், அஜய் தேவ்கன் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உள்ள ‛சிவாய்' படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சபா ஓமர் எனும் நடிகை பணியாற்றியிருப்பதாக செய்தி பரவியுள்ளது. ஆனால் இதை சிவாய் படக்குழு மறுத்துள்ளது. இதுப்பற்றி அந்த படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சிவாய் படத்தில் எந்த பாகிஸ்தான் நடிகையும் இல்லை, சில வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.