தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சஞ்சய் தத் நடிப்பில் வெளியான படங்கள் முன்னாபாய் எம்பிபிஎஸ் மற்றும் முன்னாபாய் எம்பிபிஎஸ்-2. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக இருந்தது. ஆனால் சஞ்சய் தத் சிறை சென்ற பிரச்னையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அவர் சிறைவாசத்தை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கியுள்ளார் சஞ்சய்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னபாய் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவிடம் முன்னாபாய் 3 பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது.... ‛‛முன்னாபாய் 3 படம் கண்டிப்பாக அடுத்தாண்டு துவங்கும், தற்போது அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து வருகிறது. இது சஞ்சய் தத்தின் கேரியரை இன்னும் உயர்த்தும் என நான் நம்புகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகர், அவரால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்வார்'' என்று கூறியுள்ளார்.