புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அனுஷ்கா நடித்த அருந்ததி திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றது. தற்போது அதே பெயரில் அதே பாணியில் அருந்ததி என்ற பெயரில் ஒரு தொடரை ராஜ் டி.வி ஒளிபரப்புகிறது. வருகிற 10ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
இது ஒரு பேண்டஸி கலந்த சமூக கதை. சங்கவி குடும்பத்துக்கே செல்லம். நிறைய கனவுகளோடும், ஆசைகளோடும் வளர்கிறாள். அவள் அழகி. அதனால் நிறைய இடத்திலிருந்து அவளை பெண் கேட்டும் வருகிறார்கள். உரிய வயதை அடைந்ததும் சங்கவிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். அப்போதுதான் சங்கவி வாழ்க்கையில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அவளுக்கு பார்க்கும் மாப்பிள்ளைகள் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டுகிறார்கள். அவர் கோவிலில் காலடி எடுத்து வைத்தால் எங்கோ நெருப்பு பற்றி எரிகிறது. அல்லது மழை கொட்டுகிறது.
சங்கவிக்கு என்னாச்சு என்று பெற்றோர்கள் ஆராயும்போது 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அருந்ததி என்ற பெண்ணுக்கும் சங்கவிக்குமான தொடர்பு தெரிய வருகிறது. பெற்றோர்கள் மகள் சங்கவியை காக்க போராடுகிறார்கள், சங்கவிக்குள் இருக்கும் அருந்ததி தன் வேலைகளை முடிக்க நினைக்கிறாள். இப்படிப்போகிற கதை. இது நேரடி தமிழ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.