ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகர் கஞ்சா கருப்பு, அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் புலிமலைப்பட்டியில் நீதிதேவன் என்பவரின் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தி விட்டு ஒரு குழு வந்துள்ளது. அவர்களை வழிமறித்த கஞ்சா கருப்பு உள்ளிட்டோர், அவர்களை மிரட்டி ஆறரை சவரன் நகையை பறித்து விட்டதாகவும், சம்பவம் நடந்த போது கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிதேவன் கீழவளவு போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சிவகங்கை மாவட்ட மதகுபட்டியில் நீதிதேவன் குழுவினர் மீது கஞ்சா கருப்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.