இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திரைப்படங்களில் துணை நடிகராக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பல குறும் படங்களில் நடித்து 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. திரையுலகத்தில் எந்த பின்புலம் இல்லாமல் தனது சொந்தத் திறமையால் மட்டும் உயர்ந்த நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் உயர்ந்திருக்கிறார்.
விஜய் சேதுபதியைப் பற்றி எப்போதாவது ஒரு முறைதான் கிசுகிசுக்கள் வருகின்றன. ஆனாலும், அவையும் உடனே அடங்கி விடுகின்றன. பத்திரிகையாளர்களிடம் கனிவாகவும், நட்பாகவும், மரியாதையாகவும் பேசக் கூடியவர் விஜய்சேதுபதி. அவர்களிடம் எந்த பந்தாவும் இல்லாமல் பழகுவதால் அவரைப் பற்றி அதிக சர்ச்சையான செய்திகள் வெளிவரவும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது. அதே சமயம் தன்னுடைய இமேஜை பக்கத்து வீட்டுப் பையன் போலவும், நம் குடும்பத்தில் ஒருத்தர் போலவும் அனைவரும் நினைக்க வேண்டும் என்ற விஷயத்தில் விஜய் சேதுபதி தெளிவாக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த 'றெக்க' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட 'ஆண்டவன் கட்டளை' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியைப் பற்றி கேள்வி வந்த போது கூட அது பற்றி நான் இயக்குனரிடம் எனது கருத்தைச் சொல்லிவிட்டேன். அவர்தான் அந்தக் காட்சியை வைத்தார் என்று பேசி தப்பித்துக் கொண்டார். மேலும் அதே நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை மனமாரப் பாராட்டியது, வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் நாயகனாகவும் நடிக்கத் தகுதியுடையவர் எனப் பாராட்டியது, லட்சுமி மேனனைப் பற்றிப் பேச மறந்தாலும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது, படத்தின் இயக்குனர் பெரிய ஹீரோக்களை இயக்கவும் தகுதியானவர் எனப் பாராட்டியது என அடுத்தவர்களைப் பற்றி மனம் திறந்து பாராட்டிப் பேசி தன்னுடைய இமேஜை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டார். கடந்த சில நாட்களாக சினிமா மீடியாக்கள் அனைத்திலும் அவரைப் பற்றிய செய்திதான்.
அதோடு 'மக்கள் செல்வன்' பட்டத்தைப் பற்றிக் கேட்ட போது என் டைரக்டர் ஆசிரியர், குருநாதர் சீனு ராமசாமி என் மீதுள்ள அன்பால் வைத்த அன்புப் பெயர் அது, பட்டமல்ல, அவர் மேல நான் மரியாதை வச்சிருக்கேன், அதனால அதை எடுக்க மாட்டேன்,” என்றும் சொன்னார்.
இந்தப் பேச்சுக்களால் விஜய் சேதுபதியின் இமேஜ் ரசிகர்களிடம் இன்னும் அதிகரித்துள்ளது.