மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த பாகுபலி படம் மிகப் பெரும் வசூல் படமாக அமைந்தது. முதல் பாகம் தயாரான போதே இரண்டாம் பாகத்தின் 40 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டதாக முதல் பாகத்தின் வெளியீட்டின் போதே ராஜமௌலி தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு கடைசியில் இரண்டாம் பாகத்தின் மீதிக் காட்சிகளைப் படமாக்கும் பணி ஆரம்பமானது. அன்றிலிருந்து இன்று வரை படம் பற்றிய பல்வேறு விதமான தகவல்கள், சர்ச்சைகள், குழப்பங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
படத்தில் புதிது புதிதாக சில நடிகர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும், அனுஷ்கா இன்னும் உடலை இளைக்க வைக்காததால் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும், படம் அடுத்த ஆண்டு மத்தியில்தான் வெளிவரும் என்றும் பலரும் பலவிதமான கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். அவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க ராஜமௌலி முடிவெடுத்துள்ளாராம். அதனால் இன்று ஹைதராபாத்தில் தெலுங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பாகுபலி 2 படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலாவது உண்மையா அல்லது இதுவும் மற்றவர்களால் பரப்பி விடப்பட்டதா என்பதும் இன்று அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்ற பின்புதான் தெரிய வரும்.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான வியாபாரத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இரண்டாம் பாகத்தின் வியாபாரத்தில் மட்டுமே ராஜமௌலிக்கென அவருடைய பங்காக 100 கோடி ரூபாய் வரை அவருக்குக் கிடைக்கும் என்பதுதுன் டோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்.