'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் புகுந்து காஷ்மீர் மாநிலம் யூரியில் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 19பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், நேற்று அதிகாலை பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே புகுந்து அங்கிருந்த பயங்கரவாதிகளை சர்ஜிக்கல் ஆபரேஷன் எனும் அதிரடி தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளை துவம்சம் செய்ததோடு, பாகிஸ்தானையும் அலற செய்தது. இதற்காக இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்று ஜான் ஆபிரஹாம், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள போர்ஸ்-2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது ஜானிடம் இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் ஆபரேஷன் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜான்... ‛‛நமது ராணுவத்தை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த தாக்குதலை நாம் முன்னரே நடத்தியிருக்க வேண்டும். பயங்கரவாதிகளை வேரறுக்க இதுவே உச்சமான நேரம். நம் நாடு சகிப்புதன்மை நிறைந்த நாடு, இதனால் பொறுமையாக இருந்தது. தற்போது பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா என்ன செய்ய முடியும் என்று இன்று நமது நிலைப்பாட்டை காண்பித்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.