ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. நேற்று பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டனர். இந்தச்சூழலில் சில தினங்களுக்கு முன்னர் பாக்., நடிகரான பவாத்கான், சல்மான் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை நிதின் காக்கர் இயக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் பாகிஸ்தான் நடிகரை தன் படத்தில் நடிக்க வைத்தால் சிக்கல் வரும் என்ற காரணத்தால் சல்மான்கானும், இயக்குநர் நிதினும் அந்த முடிவை மாற்றியுள்ளனர். தற்போதைக்கு அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் பவாத்கான், சல்மான் படத்தில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
இதுப்பற்றி இயக்குநர் நிதின் காக்கர் கூறியிருப்பதாவது... ‛‛என்னுடைய படத்தில் நடிக்க பவாத்கானை கேட்கவேயில்லை, நான் அவரை இயக்குவது தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.