ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. நேற்று பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டனர். இந்தச்சூழலில் சில தினங்களுக்கு முன்னர் பாக்., நடிகரான பவாத்கான், சல்மான் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை நிதின் காக்கர் இயக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் பாகிஸ்தான் நடிகரை தன் படத்தில் நடிக்க வைத்தால் சிக்கல் வரும் என்ற காரணத்தால் சல்மான்கானும், இயக்குநர் நிதினும் அந்த முடிவை மாற்றியுள்ளனர். தற்போதைக்கு அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் பவாத்கான், சல்மான் படத்தில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
இதுப்பற்றி இயக்குநர் நிதின் காக்கர் கூறியிருப்பதாவது... ‛‛என்னுடைய படத்தில் நடிக்க பவாத்கானை கேட்கவேயில்லை, நான் அவரை இயக்குவது தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.