'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டப்பிங் சீரியல்களை காவிய நேரம் என்ற தலைப்பில் சகட்டுமேனிக்கு ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி. அடுத்து ஒரு யூத்புல்லான நேரடி தமிழ் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. நடிகர் சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார். பல திரைப்படங்களையும், டி.வி. தொடர்களையும் இயக்கிய சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.
ஆபீஸ், தாயுமானவன், அச்சம் தவிர் தொடர்கள் மற்றும் மாப்ளசிங்கம், ரோமியோ ஜூலியட், பூஜை திரைப்படங்களில் நடித்திருக்கும் மதுமிலா ஹீரோயினாக நடிக்கிறார். நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த விக்ரம் தொடரின் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரியமானவள் தொடரில் நடித்து வரும் கிரிதரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"விண்ணைத்தாண்டி வருவாயா யூத்புல்லான ஒரு காதல் கதை, அழுதுவடியும் சீரியல்களும் பயறுமுத்தும் மாந்த்ரீக சீரியல்களும் பெருகியிருக்கும் இந்த நேரத்தில் பார்த்து, ரசிக்க, சுவைக்க தகுந்த சீரியலாக விண்ணைத்தாண்டி வருவாயா உருவாகி இருக்கிறது" என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.