வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குணசித்ர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இன்பசேகரன் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தை சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா ரத்தோர் ஹீரோயினாக நடிக்கிறார். ‛ஆடுகளம்' நரேன், கருணா, யோக் ஜேப்பி, உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். மகன் நடிப்பது பற்றி தம்பி ராமய்யா கூறியதாவது:
நான் சினிமாவுக்கு வந்தது இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான், ஆனால் சூழ்நிலை என்னை நடிகனாக்கிவிட்டது. என்னால் செய்ய முடியாததை என் மகன் செய்ய வேண்டும் என்று விரும்பி. அவனை பெரிய இசை அமைப்பாளராக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவன் நடிகராகும் ஆசையில் இருந்தான். இது எனக்கு பிடிக்காவிட்டாலும் என்கரேஜும் பண்ணவில்லை, டிஷ்கரேஜும் பண்ணவில்லை. அவனாகவே நடிப்பு கற்று, நடனம் கற்று, சண்டை கற்று, அவனாகவே வாய்ப்பு தேடி அலைந்து இந்தப் படத்தில் நடிக்கிறான்.
நான் சினிமாவுக்கு வந்து 25 வருடங்களாகிவிட்டது. இதுவரை நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. என் திறமையை மதித்து வந்தவற்றை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன். அதுபோல என் மகனுக்காகவும் யாரிடமும் வாய்ப்பு கேட்டு யார் வீட்டு வாசல் முன்பும் நிற்க மாட்டேன். இதை என் மகனிடமே சொல்லிவிட்டேன். அவனும் அதை ஏற்று சொந்த காலில் நிற்கிறான். இந்தப் படம் ஒரு மியூசிக்கல் சப்ஜெக்ட் என்பதற்காக இமானிடம் சொல்லி இசை அமைக்க சொன்னேன். அது ஒன்றுதான் மகனுக்காக செய்தது. மற்றபடி நான் ஷூட்டிங் பார்க்க கூட சென்றதில்லை.
நல்ல கதை, இளைஞர்கள் நன்றாக உழைத்திருக்கிறார்கள். என் மகனை நம்பி தயரிப்பாளர் 4 கோடி செலவு செய்திருக்கிறார். அவர்கள் அனைவரும் நல்லபடியாக ஜெயிக்க வேண்டும். அதற்கு மக்கள் மனது வைக்க வேண்டும் என்கிறார் தம்பி ராமய்யா.