கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
குணசித்ர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இன்பசேகரன் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தை சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா ரத்தோர் ஹீரோயினாக நடிக்கிறார். ‛ஆடுகளம்' நரேன், கருணா, யோக் ஜேப்பி, உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். மகன் நடிப்பது பற்றி தம்பி ராமய்யா கூறியதாவது:
நான் சினிமாவுக்கு வந்தது இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான், ஆனால் சூழ்நிலை என்னை நடிகனாக்கிவிட்டது. என்னால் செய்ய முடியாததை என் மகன் செய்ய வேண்டும் என்று விரும்பி. அவனை பெரிய இசை அமைப்பாளராக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவன் நடிகராகும் ஆசையில் இருந்தான். இது எனக்கு பிடிக்காவிட்டாலும் என்கரேஜும் பண்ணவில்லை, டிஷ்கரேஜும் பண்ணவில்லை. அவனாகவே நடிப்பு கற்று, நடனம் கற்று, சண்டை கற்று, அவனாகவே வாய்ப்பு தேடி அலைந்து இந்தப் படத்தில் நடிக்கிறான்.
நான் சினிமாவுக்கு வந்து 25 வருடங்களாகிவிட்டது. இதுவரை நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. என் திறமையை மதித்து வந்தவற்றை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன். அதுபோல என் மகனுக்காகவும் யாரிடமும் வாய்ப்பு கேட்டு யார் வீட்டு வாசல் முன்பும் நிற்க மாட்டேன். இதை என் மகனிடமே சொல்லிவிட்டேன். அவனும் அதை ஏற்று சொந்த காலில் நிற்கிறான். இந்தப் படம் ஒரு மியூசிக்கல் சப்ஜெக்ட் என்பதற்காக இமானிடம் சொல்லி இசை அமைக்க சொன்னேன். அது ஒன்றுதான் மகனுக்காக செய்தது. மற்றபடி நான் ஷூட்டிங் பார்க்க கூட சென்றதில்லை.
நல்ல கதை, இளைஞர்கள் நன்றாக உழைத்திருக்கிறார்கள். என் மகனை நம்பி தயரிப்பாளர் 4 கோடி செலவு செய்திருக்கிறார். அவர்கள் அனைவரும் நல்லபடியாக ஜெயிக்க வேண்டும். அதற்கு மக்கள் மனது வைக்க வேண்டும் என்கிறார் தம்பி ராமய்யா.