'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
பழம்பெரும் நடிகை கண்ணாம்பா, தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாகவும், சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாகவும் நடித்து புகழ்பெற்றார். சினிமா உலகில் அந்தக் காலத்திலேயே லட்சக் கணக்கில் சம்பாதித்தவர் அவர். ஆனால் சொந்தப் படம் எடுத்து, சம்பாதித்த அனைத்தையும் இழந்து கண்ணீர் கடலிலும், கடன் கடலிலும் மூழ்கிய முதல் நடிகை அவர் தான்.
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய கண்ணாம்பா பி.யூ.சின்னப்பா நடிப்பில் ஹரிச்சந்திரா என்ற படத்தை பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்தார். அந்த நேரத்தில் கன்னடத்தில் தயாரான ஹரிச்சந்திர படம் தமிழில் டப் செய்யப்பட்டு கண்ணாம்பாவின் ஹரிச்சந்திராவுக்கு முன்னமே வெளியானதால் படுதோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
அதன்பிறகு நாகபஞ்சமி என்ற புராண படத்தை தயாரித்தார். இதில் அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, தங்கவேலு நடித்தனர். இதே கதை மோகனராவ், ஜமுனா, ஜானகி நடிப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் தயாரானது. இந்தப் படம் கண்ணாம்பாவின் நாகபஞ்சமிக்கு முன்பே நாகதேவதை என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. கண்ணாம்பாவின் ஒரிஜினல் நாகபஞ்சமி பெரும் தோல்வி அடைந்தது. இதிலும் பெரும் நஷ்டம் அடைந்தார்.
அதன் பிறகும் அவர் தயாரித்த நவஜீவனம், ஏழை உழவன் படங்களும் தோல்வி அடையவே பெரும் பொருளாதார சிக்கல்களை உருவாக்கி பெரும் கடனாளியானார். அவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ ராஜேஷ்வரி பிலிம்ஸ் சீர்குலைந்து போனது. நடிப்பில் ரசிகர்களை அழவைத்த கண்ணாம்பா, தன் இறுதி காலத்தை கண்ணீருடேனேயே கழித்தார். அன்று கண்ணாம்பாவிற்கு ஏற்பட்ட இழப்புதான். இன்றுவரை நடிகைகளை சொந்தப் படம் எடுக்க யோசிக்க வைக்கிறதோ என்னவோ...?