டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆர். பார்த்திபன் கடைசியாய் இயக்கியது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை. இந்தப்படத்தை இயக்கிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.ஒரு சில படங்களில் தற்போது நடித்து வரும் பார்த்திபன் மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜூலை மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது. கிரவுட் ஃபண்டிங் முறையில் பலரது முதலீட்டுடன் பார்த்திபன் தயாரிக்கும் இந்தப்படத்தில் அவர் ஹீரோ இல்லை. அவரது குருநாதரான பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார்!
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இவர். மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட பார்வதி நாயர் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் மலையாளப் பெண்ணாகவே நடிக்கிறார். இதற்காகத்தான் பார்வதி நாயரை தேர்வு செய்தாராம் பார்த்திபன். சாந்தனு அண்மையில் திருமணம் செய்த கீர்த்தி மலையாளப் பெண்தான். நிஜ வாழ்க்கை ஜோடியைப்போலவே தற்போது படத்திலும் சாந்தனுவுக்கு மலையாளப்பெண் ஜோடியாகி இருக்கிறார். என்னே ஒரு ஒற்றுமை?