'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜோ அச்சுதானந்தா படத்திற்கு பின்னர் ரோஹித் போலீஸாக நடிக்கும் திரைப்படம் “அப்பட்லோ ஒகௌன்தேவடு”. பானம், ரௌடி ஃபெலோ, அசுரா போன்ற படங்களில் போலீஸாக மிரட்டிய ரோஹித் மீண்டும் “அப்பட்லோ ஒகௌன்டேவடு” படத்தில் போலீஸாக நடிக்கின்றார். சாகர் சந்திரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன்னி ராஜூ மற்றும் ஹரி இணைந்து தயாரிக்கின்றனர். ரோஹித்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அக்டோபரில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அக்டோபரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட துருவா திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரோஹித் “அப்பட்லோ ஒகௌன்தேவடு” படத்தை அக்டோபரில் திரையிட தீவிரம் காட்டுகின்றாராம். ராம் சரண் நடிக்கும் துருவா படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையாததால் துருவா படத்தின் வெளியீடு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.