ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் மாநிலம் யூரியில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து பாலிவுட்டில் உள்ள பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் கரண் ஜோகர் இயக்கியுள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தில் பாக்., நடிகர் பவாத்கான் நடித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கரண் ஜோகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எம்என்எஸ்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கரண் ஜோகருக்கு நடிகர் சல்மான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். சல்மான்கான், ராஜ்தாக்ரேயிடம் பேசி, கரண் ஜோகருக்கும், ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதேப்போன்று பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.