ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏழு ஆண்டுகளாக இருந்த காதல் உறவை, ஒருவர் உடைத்து விட்டார் என, நடிகை வரலட்சுமி கூறியுள்ளார். சினிமா வட்டாரத்தில், அடிக்கடி பேசப்பட்ட விஷால் - வரலட்சுமி காதல் விவகாரம், நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழு ஆண்டுகளாக இருந்த எங்களுடைய காதல் உறவை, ஒருவர் உடைத்து விட்டார். அந்த செய்தியை, தன்னுடைய மேலாளர் மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார். உலகம் எங்கே போகிறது; காதல் எங்கே இருக்கிறது என, டுவிட்டரில் வரலட்சுமி பதிவு செய்துள்ளார்; இது, விஷாலுடன் உள்ள காதல் முறிந்து விட்டதை, வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. இதுவரை விஷாலும், வரலட்சுமியும் காதலை வெளிப்படையாக கூறவில்லை; ஆனால், இருவரின் நட்பு, நெருக்கமான புகைப்படங்கள், காதலை காட்டியது. காதலர் யார் என்பதை கூறாத வரலட்சுமி, காதல் முறிந்ததை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.