ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நலம் தேறியுள்ளதால் அங்கிருந்தபடியே தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். இதனிடையே முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாக வேண்டி, நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
‛‛வணக்கம், இயற்கை நமக்கு தந்த வரம். தமிழ் மக்களுக்காக, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் “தமிழ்நாடு முதல்வர்” அம்மா அவர்கள், உடல் நலனையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை குவிக்கிறோம்! விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திகிறோம்''.
இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.