பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இயக்குநர் ஷங்கருக்கு மலையாள நடிகர்கள் மீது எப்போதுமே தனி மரியாதை. தன்னுடைய படங்களில் மலையாளப்பட நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் கலாபவன் மணி நடித்திருந்தார். அடுத்து அவர் இயக்கிய 'ஐ' படத்தில் சுரேஷ் கோபியை நடிக்க வைத்திருந்தார். இதற்கு முன் ஷங்கர் இயக்கிய பெரும்பாலான படங்களிலும் வேறு சில மலையாள நடிகர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
ஷங்கரின் இந்த வித்தியாசமான சென்டிமென்ட் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்திலும் தொடர்கிறது. இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக மலையாள நடிகர் 'கலாபவன்' ஷாஜோனை ஒப்பந்தம் செய்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை போலீசில் சிக்க வைக்க துடிக்கும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்தவர் ஷாஜோன். 'பாபநாசம்' படத்தில் 'கலாபவன்' மணி எற்று நடித்தாரே அதே வேடம்தான். ஷாஜோன். 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் படம் ஷங்கரின் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷங்கர் இப்போது பரபரப்பாக இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். விரைவில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படமாக திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.