தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை சவுகார் ஜானகி தெலுங்கு வானொலியில் பாடகியாகவும் நடிகையாகவும் இருந்தார். ஒரு நாள் அவரை சந்தித்த இயக்குனர் பி.என்.ரெட்டி "நீ சினிமாவில் நடிக்கிறாயா?" என்று கேட்டார்" நடிக்க ஆசைதான் ஆனால் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதே" என்றார். "அப்படியென்றால் நீ சினிமாவில் நடிக்க வேண்டாம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஜானகிக்கு திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது. அவரது தங்கை கிருஷ்ணகுமாரி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் சவுகார் ஜானகி குடும்ப வறுமையில் சிக்கினார். கணவரும் சினிமாவில் நடிக்க அனுமதி தரவில்லை. வேறு வழியில்லாமல் அரைகுறை மனதுடன் கணவர் சினிமாவில் நடிக்க ஒப்புதல் தந்தார். கணவன், மனைவி இருவரும் முன்பு சினிமாவில் நடிக்க கேட்ட இயக்குனர் பி.என்.ரெட்டியை சந்தித்தார்கள். அவரோ "குடும்ப வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் சரிப்பட்டு வராது" என்று மறுத்தார் என்றாலும் ஜானகி "தனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை போய்விட்டது. இருந்தாலும் குடும்ப செலவை சமாளிக்க வேறு வழியில்லை" என்று முறையிட்டார்.
இதனால் இயக்குனர் பி.என்.ரெட்டி, தனது தம்பியும் தயரிப்பாளருமான நாகி ரெட்டிக்கு சிபாரிசு செய்தார். அப்போது அவர் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் சவுகார் என்ற படம் தயாரிக்கும் முயற்சியில் இருந்தார். அந்தப் படத்தில் ஜானகியை நடிக்க வைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. சாதாரண ஜானகி சவுகார் ஜானகி ஆனார். அதன்பின்னர் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் பல வெற்றி படங்களில் தொடர்ந்தது.