தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காவிரி நீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படவும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெறவும் வேண்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், நடிகர் ரஜினியின் சகோதரர், 1,008 கலச பூஜை செய்து வழிபட்டார்.
நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணன் இவர் நேற்று, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தன் உறவினர்களுடன், வந்தார். சுவாமி சன்னிதி முன், 1,008 சங்காபிஷேக பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சத்திய நாராயணன் கூறுகையில், முதல்வர் ஜெ., உடல் நலம் பெற்று நீடூழி வாழவும், காவிரி பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்பட்டு, மக்கள் அமைதியுடன் வாழவும் வேண்டி, கோவிலில், 1,008 கலச பூஜை செய்து வழிபட்டோம், என்றவர், ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டார். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அதில் உடன்பாடு கிடையாது. தற்போது எந்திரன்-2 படம் வேகமாக உருவாகி வருகிறது என்றார்.