ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்கா, வலியவன், புகழ், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என பல படங்கள் வெளியானபோதும், எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது சென்னை-28 பார்ட்-2, எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதில், சென்னை-28 பார்ட்டி-2 அவர் பெரிதாக எதிர்பார்த்த படம் என்றபோது, அதில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் தான் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் ஜெய். அதனால்தான் அந்த படத்தின் பிரஸ்மீட்டில்கூட அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
இந்த நிலையில், தற்போது கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் போன்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்து வரும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ஜெய். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியுள்ளதாம். அதனால் ஒருவேளை காதல் கைகொடுக்கவில்லையென்றாலும் காமெடி கைகொடுத்து தன்னை காப்பாற்றி விடும் என்று நம்பும் ஜெய், இந்த படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று கூடுதலாக மெனக்கெட்டு வருகிறாராம்.