சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
தமிழில் பிரவீண்காந்த் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் முன்னாள் உலக அழகி சுஷ்மிதாசென். அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ஷக்கலக்கபேபி என்ற பாடலில் நடனமாடிய சுஷ்மிதாசென், பாலிவுட்டின் முன்னணி நடிகை களில் ஒருவராகியிருக்கிறார். இவருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.
அதாவது, மும்பையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பரவாமல் இருக்க மாநகராட்சி அதிரடி முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்காரணமாக, வீடுகளில் தண்ணீரை தேங்க விடாமல் செய்து பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது பற்றி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம். ஆனால் சமீபத்தில் நடத்தப் பட்ட சோதனையில் நடிகை சுஷ்மிதா சென்னின் வீடு அமைந்துள்ள இடத்தில் டெங்கு கொசுக்களை அழிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையாம்.
அதனால், சுஷ்மிதா சென்னுக்கு அபராதம் விதித்ததோடு, விளக்கம் கேட்டும் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.