துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தற்போது சினிமாவில் நடிகனாக அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர்.. கேரளாவில் ப்ளஸ்டூ படித்துக்கொண்டு இருந்தபோதே, கல்லூரி படிப்பிற்கு அவரை லயோலாவில் தான் சேர்க்கவேண்டும் என தீர்மானம் செய்துவிட்டாராம் ஜெயராம்.. சொல்லப்போனால் மகனை லயோலாவில் படிக்கவைக்க வேண்டும் என்பது ஜெயராமின் லட்சியங்களில் ஒன்று.. ஆனால் அங்கே சேர்க்கவேண்டும் என்றால் 90 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் எடுக்க வேண்டுமே.. நம் மகன் வெறும் 60 அல்லது 70 சதவீதம் மட்டும் எடுத்தால் என்ன பண்ணுவது என்கிற கவலையும் அவருக்கு இருந்ததாம்.
அந்த சமயத்தில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சி ஒன்றை நடத்திய லயோலா கல்லூரி, அதற்கு சிறப்பு விருந்தினராக ஜெயராமையும் அவரது குடும்பத்தாரையும் அழைத்திருந்தது.. அதை தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே கருதினார் ஜெயராம். அந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் கலந்துகொண்ட ஜெயராம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு இந்த கல்லூரியில் தான் தனது மகனை படிக்கவைக்க விரும்புவதாகவும் அது தனது லட்சியம் என்றும் குறிப்பிட்டார்.. கல்லூரி தாளாளரும் மகிழ்ச்சியுடன் சரி என தலையாட்டினாராம்...
ஆனால் ஜெயராமோ இப்படி சொன்னால் போதாது, மேடையிலேயே சத்தியம் செய்து தாருங்கள் என விடாப்படியாக நின்றாராம்.. தாளாளர் தயக்கத்துடன் முழிக்க, ஆயிரக்கணக்கான மாணவர்களும் தாளாளரை பார்த்து சத்தியம் செய்யுங்கள்' என கோரஸாக கோஷம் போட ஆரம்பித்துவிட்டனாராம். தாளாளரும் வேறு வழியின்றி பொதுமேடை என்பதால் சத்தியம் செய்தாராம். அத்துடன் அடுத்த வருடம் சொன்னது போல 75 சதவீதமே வாங்கிய காளிதாஸுக்கு சீட்டும் கொடுத்துவிட்டாராம்.