'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள இயக்குனர் சித்திக், கடந்த வருடம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை இயக்கியதை தொடர்ந்து இந்த வருடம் தனது நண்பர் லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு கதை மட்டும் எழுதிக்கொடுத்தார்.. இப்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சித்திக். ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்திற்கு 'ஃபக்ரி' என டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக 'பிசாசு' நாயகி பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார்.
'பிசாசு' படத்தில் ஒரு காட்சியை தவிர படம் முழுவதும் தனது ஒரிஜினல் முகத்தையே காட்டாமல் நம்மை மிரட்டிய பிரயாகா, தற்போது மலையாளத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த 'ஒருமுறை வந்து பார்த்தாயா' படம் வெளியானது. அடுத்ததாக 'ஒரேமுகம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுவரை சின்னச்சின்ன படங்களில் நடித்துவந்த பிரயாகாவுக்கு சித்திக்கின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், தான் எப்படியும் ஒரு முன்னணி நடிகையாகி விடுவோம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் பிரயாகா..