ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளா கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும் கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கலையில் மிகுந்த நாட்டமுள்ளவர். அதிலும் சமூகத்துக்கு பயன்படும் விதமான கருத்துக்களை டிவி, சினிமா மூலம் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவர்.. அதனால் தான் இயக்குனர் ஜீவன் தாஸ் என்பவர் தான் இயக்கவிருக்கும் 'கேம்பஸ் டைரி' என்கிற படத்தின் கதையையும் அதில் சொல்லப்படவிருக்கும் சமூக கருத்தையும் அவரிடம் சொல்லி, அந்தப்படத்தில் நடிக்கும்படி கேட்க எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டாராம் அச்சுதானந்தன்.
சுற்றச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை என்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் முன்னாள் முதல்வர். கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அவரது நிஜ வாழ்க்கை கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார் அச்சுதானந்தன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் வைத்து பேசி முடித்துள்ளார் அச்சுதானந்தன்.. இத்தனைக்கும் டெல்லி சென்று திரும்பியவர் பயணக்களைப்பையும் மீறி, ஓய்வை ஒதுக்கிவிட்டு வந்து டப்பிங் பேசிக்கொடுத்தை கண்டு நெகிழ்ந்துவிட்டனராம் படக்குழுவினர்.