ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யா நடிப்பில் இயக்கிய அஞ்சான் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சண்டக்கோழி-2 படத்தை லிங்குசாமி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அவருக்கும், விஷாலுக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தனது அடுத்த படத்தை லிங்குசாமி இயக்கயிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதனால் அந்த படத்திற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி.
இந்த நிலையில், லிங்குசாமி எழுதிய லிங்கூ-2 என்ற கவிதை தொகுப்பு மூன்று மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. முதலில் அவர் எழுதிய லிங்கூ என்ற கவிதை தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் லிங்கூ-2 என்ற லிங்குசாமியின் இன்னொரு கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. தமிழில் எழுதிய இந்த தொகுப்பினை தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட, மொழி பெயர்க்கும் பணிகள் நடக்கிறது.