'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை த்ரிஷாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதன் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ராணா, அஜித்துடன் ஆரம்பம், ஆர்யா, பாபி சிம்ஹாவுடன் பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராஜமௌலியின் பாகுபலி படத்தில் பலதேவ் எனும் வில்லன் வேடத்தில் மிரட்டிய ராணா அப்படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ராணா செய்தியாளர்களை எதிர்கொள்ளும் போது தவறாமல் எதிர்கொள்ளும் கேள்வி, திருமணம் எப்போது என்று தான். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராணாவிடமும் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராணா, குடும்பதினார் தனது திருமணத்தில் அதிக அவசரம் காட்டுவதாகவும் ஆனால் தான் நிதானமாகவே திருமண பந்தத்தில் இணைய விரும்புவதாகவும் கூறியுள்ளார். கைவசம் பல படங்கள் இருப்பதால் இரண்டு வருடங்களுக்கு பிறகே திருமணம் குறித்து யோசிக்க முடியும் என்றும் ராணா கூறியுள்ளார்.