டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நல்ல நல்ல திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்து விடுவதற்குப் பெரிய மனம் வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இன்றைய திரையுலகில் செய்பவர்களில் முதன்மையாக இருப்பவர்களில் தனுஷ் குறிப்பிடப்பட வேண்டியவர். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் புதிதாக வருபவர்களை வரவேற்பதில் சீனியர்களுக்கு எப்போதும் ஒரு தயக்கம் இருக்கும்.
ஆனால், அதையெல்லாம் மீறி டிவி பக்கம் இருந்து வந்த சிவகார்த்திகேயனை தான் தயாரிக்கும் படத்திலேயே நாயகனாக உயர்த்தி அவருக்கு தனி அந்தஸ்தை உருவாக்கிக் கொடுத்தவர் தனுஷ். அதன் பின் இருவருக்கும் என்ன நடந்ததோ, 'முடிஞ்சா இவன புடி' பட இசை வெளியீட்டின் போது கூட அருகருகில் அமர்ந்தும் கூட தனுஷும், சிவகார்த்திகேயனும் முகத்தை வேறு வேறு திசையில் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்ததை இந்த உலகம் அறியும். அதற்கு முன்பே பத்திரிகையாளர்களைச் சந்தித்த தனுஷ், சிவகார்த்திகேயன் வளர்ந்துவிட்டார், அவருக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு எனது நிறுவனம் பெரிய நிறுவனம் அல்ல என்று சொன்னார்.
இப்போது அதே வரிகளை கொஞ்சம் மாற்றி அனிருத்துக்காக அதைச் சொல்லியிருக்கிறார். 'பீப் சாங்' பிரச்சனையினால் தனுஷ், அனிருத்தை விட்டு விலகினார் என்றும், சிம்புவும், அனிருத்தும் நெருங்கிய நட்புடன் பழக ஆரம்பித்தது தனுஷுக்குப் பிடிக்கவில்லை என்றும் சொன்னார்கள். அதற்கேற்றால் போல் அதன் பின் தனுஷ் தயாரித்த படங்களில் இளையராஜாவும், சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.
தற்போது தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி' படத்திலும் ஷான் ரோல்டன்தான் இசையமைப்பாளரக தன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். தான் படம் இயக்க முடிவு செய்த உடனே அதற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டனைத்தான் நினைத்தேன் என தனுஷ் சொல்லியிருக்கிறார்.
தனுஷும், அனிருத்தும் உறவினர்கள் என்ற நெருக்கத்தையும் தாண்டி இருவருக்குள்ளும் வேறு ஏதோ ஒரு பிரச்சனை அவர்களைப் பிரித்து வைக்கிறது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஆக, தனுஷிடமிருந்து விலகிய முதல் விக்கெட்டாக சிவகார்த்திகேயன் இருக்க, இரண்டாவது விக்கெட்டாக அனிருத்தும் சேர்ந்திருப்பது கோலிவுட்டில் ஆச்சரிய, அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.